Main Menu

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, அரசாணைச் சட்டத்தில் தற்போதுள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில், முதல் நியமனப் பத்திரத்தின்படி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதத்துக்குக் குறையாமலும் இரண்டாவது நியமனப் பத்திரத்தின்படி தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25 வீதத்திற்கு குறையாத இளைஞர் பிரதிநிதிகளையும் நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்ட மூலம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...