ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதியிடம் கையளிக்கப் படுகின்றது அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அமைச்சரவை துணைக்குழு தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்கள் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க உளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம்- அமலநாயகி