ஈரானுக்கு இன்னும் 48 மணித்தியாலங்-களே அவகாசம்: டிரம்ப் எச்சரிக்கை
ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுக்கு இன்னும் சுமார் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், இதற்காக தான் ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அந்த கால அவகாசம் முடிவுக்கு நெருங்கிக்கொண்டிருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
