Main Menu

இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 2007 பேர் குணமடைந்துள்ள நிலையில், 564 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...