Main Menu

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு ஒரே நாளில் 30ஐ கடந்தது

நாட்டில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்பாகும்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த உயிரிழப்பு 923 ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...