Main Menu

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய எஸ்டிடி – எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 611 நோயாளர்கள் ஆண்களாவர்.

மேலும் 2022 ஆம் ஆண்டில் 607 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...