Main Menu

இன்று திறக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது.

நாளை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை வியாழக்கிழமை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது.

பகிரவும்...