Main Menu

இன்று கூடி ஆராயவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்

அடுத்­த­கட்­ட­மாக எவ்­வா­றான நகர்வை முன்­னெ­டுப்­பது என்­பது  தொடர்பில்  பதவி வில­கிய முஸ்லிம்  எம்.பி.க்கள் இன்று பாரா­ளு­மன்ற வளா­கத்தில் கூடி  ஆரா­ய­வுள்­ளனர். 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­த­லை­ய­டுத்து முஸ்லிம் சமூகத்­துக்கு ஏற்­பட இருந்த ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் நாட்டின் இன ஒற்­று­மையை பாது­காக்கும் வகை­யிலும் அர­சாங்­கத்தில் அமைச்­சுப் ­பொ­றுப்­பு­களில் இருந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் பத­வி­களை ராஜி­னாமா செய்­தி­ருந்­தனர். அத­னைத்­தொ­டர்ந்து அர­சாங்க தரப்பில் இருந்தும் மகா­நா­யக்க தேரர்­களும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் அமைச்­சுப்­ப­த­வி­களை மீண்டும் பொறுப்பேற்­றுக்­கொள்­ள­வேண்டும் என அழுத்தம் தெரி­விக்­கப்­படும் நிலையில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று பாரா­ளு­மன்ற வளா­கத்தில் கூடி ஆராய இருக்­கின்­றனர். 

அத்­துடன் கூட்­டத்தில் சாத்­தி­ய­மான இணக்­கப்­பாடு ஏற்­பட்டால் அடுத்­த­கட்­ட­மாக பிர­த­ம­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது­தொ­டர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம். ஹரீஸ் தெரி­விக்­கையில், 

முஸ்லிம் சமூகத்தின் பாது­காப்­புக்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்­லாத நிலை ஏற்­பட்­ட­போதே இறுதி முயற்­சி­யாக அமைச்­சுப்­பொ­றுப்­புக்­களில் இருந்த முஸ்லிம் அமைச்­சர்கள், ராஜாங்க அமைச்­சர்கள், மற்றும் பிரதி அமைச்­சர்கள் தங்கள் பத­வி­களை துறந்து விசா­ர­ணை­க­ளுக்கு இட­ம­ளித்தோம்.

நாங்கள் பதவி வில­கும்­போது பிர­த­ம­ரிடம் சில கோரிக்­கை­களை முன்­வைத்தோம். அந்த கோரிக்­கைகள் இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. குறிப்­பாக முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு இன்னும் முழு­மை­யான உத்­த­ர­வாதம் இல்­லாமல் இருக்­கின்­றது. அதே­போன்று ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விரைவில் விசா­ரணை செய்து தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தோம். இன்னும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. அத்­துடன் சிறு­வி­ட­யங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பாவி முஸ்­லிம்கள் பலர் விடு­விக்­கப்­ப­டாமல் இன்னும் சிறை­களில் இருக்­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் நாங்கள் அமைச்­சுப்­ப­த­வி­களை ஏற்­றுக்­கொள்­வ­தென்­பது பொருத்தம் இல்லை என்றே நினைக்­கின் றேன். அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் போன்­ற­வர்­க­ளுக்கு அமைச்­சுப் ­பொ­றுப்­புக்­களை மீண்டும் ஏற்­றுக்­கொள்­ள­ வேண்டும் என்ற அழுத்தம் இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

அதனால் இன்று மாலை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­குதியில் ஆளுங்­கட்சி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சந்­தித்து கலந்­து­ரை­யாட இருக்­கின்றோம். இந்த சந்­திப்பில் குறித்த இரு­வரும் அவர்­களின் நிலைப்­பாட்டை அறி­விப்­பார்கள். அவர்­களின் கோரிக்­கைகள் தொடர்பில் பொது இணக்­கப்­பாடு எட்­டப்­படும் பட்­சத்தில் பிர­த­ம­ருடன் சந்­தித்து தீர்­மானம் ஒன்­றுக்கு வர­மு­யற்­சிப்போம் என்றார்.

இதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள் ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் இன்று மாலை 2 மணிக்கு கூடுகின்றது. இன் றைய விசாரணைக்குழுவில், காத்தான்குடி சூபிக்குழுவின் தலைவர், காத்தான்குடி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதி காரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டி ருக்கின்றனர்.

பகிரவும்...