Main Menu

இன்று ஈஃபிள் கோபுரம் திறக்கப் படுகின்றது

கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் ஈஃபிள் கோபுரம் இன்று திறக்கப்படுகின்றது.  ஜூன் 25 ஆம் திகதி, இன்று முதல் ஈஃபிள் கோபுரத்தை பார்வையாளர்கள் பலத்த கட்டுப்பாட்டுக்கு மத்தியில் பார்வையிடலாம். முதல் ஒருவார காலத்துக்கு வெறுமனே படிக்கட்டுகளில் மாத்திரமே ஈஃபிள் கோபுரத்தில் ஏற முடியும். தவிர முதல் இரண்டு தளங்கள் மாத்திரமே திறக்கப்படும். 

 ஜூலை 1 ஆம் திகதி ஈஃபிள் கோபுரம் முற்றாக திறக்கப்பட்டு, மின் தூக்கியும் செயற்பட ஆரம்பிக்கும்.  சமூக இடைவெளியும், கட்டாய முகக்கவசங்களும் நிபந்தனையாக்கப்பட்டுள்ளன.  முதல் சில வாரங்களுக்கு 4 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு.€1.30 யூரோக்களுக்கு நுழைவுச் சிட்டை விற்பனையாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...