Main Menu

இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கடிதங்களுடன் மூவர் கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும்; இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும்; உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பகிரவும்...