Main Menu

இந்த வருட நத்தார் புதாண்டுப் பண்டிகைகள் அசாதாரணமாகவே இருக்கும் – சுகாதார அமைச்சர்

அனைவரிற்கும் இது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருந்துள்ளது. இதனை இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

“இந்த வருடத்தின் நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகள் எதுவும் சாதாரண நிலையில் இருக்காது. எந்தவிதமான இரவுக் கொண்டாட்டங்களும் சாத்தியமற்றதாகவே இருக்கும். கொரோனத் தொற்றின் எண்ணிக்கையும் வைத்தியசாலைகளின் நோயாளிகளின் எண்ணிக்கையும் உச்சத்தைத் தொடும்” எனவும் பிரான்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பண்டிகைகளை சிறிது சாதாரண நிலையில் நடாத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றோம். ஆனால் அது சாத்தியமற்றது என்ற அச்சமே உள்ளது” என்றும்
சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பகிரவும்...