Main Menu

இந்தியாவில் டெல்டா தொற்றின் புதிய திரிபு அடையாளம்

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான டெல்டா தொற்றின் ஒரு பகுதி இந்தியாவில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டெல்டா தொற்றின் ஏ.ஒய் -4 என்ற புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாகவும், இந்த தொற்றுடன் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், இந்தூரில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனவும், இந்த புதிய உருத் திரிபு வேகமாக பரவக்கூடியது எனவும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...