Main Menu

இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் கேரளா  ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் குழந்தை பெறும் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் குழந்தைகளுக்கு  ஈடாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து சமனிலை எட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியும் 100 வீதமான பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...