Main Menu

இடை விலகிய இராணுவ வீரர்களுக்கு 22ம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம்

இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பொதுமன்னிப்பு காலவரையரை 2019 ஏப்ரல் 22 தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை இராணுவத்தால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சேவையில் இருந்து விலகுவதற்கான இப்புதிய திட்டத்தின் கீழ் இடைவிலகியவர்கள் நேரடியாக தங்களது படையணித் தலைமையகத்துக்கு சென்று அல்லது தொடர்புகொண்டு குறிப்பிட்ட பொதுமன்னிப்பு காலத்திற்குள் அவர்களுடைய விலகளை பெற்றுக்கொள்ள முடியும். 

மேலும் 6 மாதங்களுக்கு மேலாக சேவையை விட்டு விலகியவர்கள் மறுபடியும் இராணுவத்தில் இணைய வேண்டுகோள் விடுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை மீள் இணைப்பது சம்பந்தமாகவும் கவனத்திற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...