Main Menu

இங்கிலாந்து ராணி உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் ராணியின் உடலுக்கு அவரது 2வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ அஞ்சலி செலுத்தினார். ஒரு மகன் மீதான உங்கள் அன்பு, இரக்கம், அக்கறை, நம்பிக்கையை என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வருகின்றனர்.

பகிரவும்...