Main Menu

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து புடினுடன் கலந்துரையாடினார் மோடி!

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் விரிவாக ஆலோசனை செய்துள்ளார்.

இந்த ஆலோசனை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘ஆப்கானில் நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

கொவிட்டிற்கு எதிராக இந்தியா – ரஷ்யா ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...