Main Menu

அரசியல் பின்புலத்தினூடாகவே மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் – சாள்ஸ் நிர்மலநாதன்

மக்களையும் நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.உண்மையில் மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற தலைவர் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களினை இலக்கு வைத்து பயங்கரவாத அமைப்பு தற்கொலைக் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.
இந்த தற்கொலைக்குண்டு தாக்குதலின் மூலம் குறிப்பாக தமிழ்,கத்தோலிக்க மக்கள் அவர்களின் இலக்காக அமைந்துள்ளது.

மனிதர்களை அழிக்க வேண்டும் என்ற கொடூர சிந்தனையோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த தாக்குதல் சம்பவம். என்னைப் பொருத்த மட்டில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்பு 10 ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மனித வெடி குண்டுகளாக மக்கள் மத்தியில் வெடித்து மக்களை கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

-இதற்கு உண்மையில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.இராணுவத்தினுடைய புலனாய்வு மற்றும் நாட்டினுடைய புலனாய்வுப் பிரிவினுடைய பலவீனம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மக்களையும் நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

உண்மையில் மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற தலைவர்தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.அதனை விடுத்து நாங்கள் அரசாங்கத்தில் இருக்க வேண்டும்.அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசாங்கத்தை கொண்டு செல்பவர்கலாக இருந்தால் அரசாங்கத்தில் பங்காளிகலாக இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்ற அரசியல் வாதிகள் ஒரு சில பிழைகளை செய்கின்ற போது அரசாங்கம் அதனை தட்டிக் கேட்பதில்லை.

தட்டிக்கேட்காமல் இருந்ததன் காரணத்தினாலேயே இன்றைக்கு இவ்வளவு படு கொலைகள் இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் வெட்கப்பட வேண்டிய விடையம் என்னவென்றால் பாடசாலையைக்கூட நடத்த முடியாத நிலையில் இந்த நாட்டை அரசாங்கம் வைத்துள்ளது என்பது மிகப்பெரிய கேவலமான ஒரு செயல்.அந்தளவுக்கு அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவரையும் சேர்த்தே இதனை தெரிவிக்கின்றேன்.முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று நீண்ட நாட்களாகவே இலங்கையில் செயல்பட்டு வந்துள்ளது.
குறித்த செயல்பாட்டிற்கு இலங்கையில் நிச்சயமாக அரசியல் பலம் தேவை.அந்த அரசியல் பலத்தின் மூலமே பயங்கரவாதிகள் வளர்ந்தார்கள்.அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றது.ஆனால் இன்று அரசியல் ரீதியான அரசியல் தலைவர்களை அல்லது அமைச்சர்களை இராணுவ புலனாய்வு அல்லது தேசிய பாதுகாப்புச் சபை விசாரனைகளை மேற்கொள்ளுமா? என்பதில் சந்தேகம் உள்ளது.

அவர்கள் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லாத காரணத்தினால் இரண்டு கட்சிகளினுடைய இலக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் இடம் பெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலாக இருக்கின்றதே தவிர நாட்டினுடைய பாதுகாப்போ,அல்லது மக்களினுடைய பாதுகாப்போ என்ற எந்த சிந்தனையும் யாருக்கும் இல்லை.அப்படியான ஒரு சூழ்நிலையில் நாடு ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது.

இன்று மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.இதற்கு காரணம் தற்போதைய அரசாங்கம்.தவறு செய்கின்றவர்களை தொடர்ந்தும் பதவிகளில் வைத்திருப்பதும்,அரசாங்கத்தை நடத்தவதற்காக அவர்களை ஊக்குவிக்கின்றமையும் தான் இன்று இவ்வளவு படுகொலைகள் நடப்பதற்கும் காரணமாக உள்ளது

.
இன்று முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களுடன் அமைச்சர்கள்,ஆளுனர் ஆகியொருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. நேரடியாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்ற போது நாட்டின் நன்மை கருதியும் மக்களின் நன்மை கருதியும் அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.விசாரணை நிறைவடைந்த பின்னரே அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட வேண்டும்.

மக்களை படு கொலை செய்து விட்டு மக்களின் இரத்தத்தில் அந்த பதவிகளை வைத்திருப்பார்கள் என்றால் மக்கள் தகுந்த நேரத்தில் தகுந்த பாடம் கற்பிக்க தயாராக உள்ளனர்.மக்கள் தெளிவடைந்து விட்டனர்.
இதன் பின்னனியில் யார் இருக்கின்றார்கள் என்று.அண்மையில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகின்ற அமைச்சர்கள் மற்றும் அளுனர் ஏன் இன்னும் விசாரனைகளுக்கு உற்படுத்தவில்லை?.

ஜனாதிபதியை பொறுத்த மட்டில் அவர் நியமித்த ஆளுனர்கள் மூலம் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை தேடிக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதியின் மன நிலை உள்ளது.

அதே போன்று பிரதமர் தன்னுடைய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்களை விசாரனை செய்தால் தன்னுடைய அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்ற மனநிலை பிரதமருக்கு உள்ளது.தங்களுடைய அரசாங்கத்தை ஆழ வேண்டும் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொண்டு எப்படி விசாரணைகளை மேற்கொள்ள முடியும்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...