Main Menu

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகிறது- மணிவண்ணன்

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ். மாநகர சபையினைக் கலைத்து அரசாங்கத்திற்குச் சார்பாக இந்த மாநகர சபையைப் பொறுப்பேற்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனத் திரிந்தவர்கள்.

அதேபோல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களைச் செய்தவர்கள்.

தற்போது மாநகர சபையினைக் கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...