Main Menu

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...