Main Menu

பலர் இணைந்து தாக்கியதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு : 11 பேர் கைது

வெலகெதர பொலிஸ் பிரிவின் ஹேவன்பொல பகுதியில், கடந்த 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக  சிறுவனொருவன் பல சிறுவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டு  குருநாகல் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (22)  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் ஹேவன்பொல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவராவார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின்  அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் எரேபொல கந்த மற்றும்  அம்பகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களாவர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares