ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

ஒருசில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக, முஸ்லிம் இளைஞர்கள் சிலரைத் திசை திருப்பி மோசமான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகமும் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் தாம் பிரார்த்திப்பதாக ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
தற்போது அந்த சம்பவம் தொடர்பில் சில உண்மைகள் வெளிவருவதாகவும், இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்ற உண்மைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக் கொண்டார்.
பகிரவும்...