அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகின்றது.
இதில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பல அரசியல் கைதிகள் இதுவரையில் விடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்கார, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன்படி, உரிய சட்டத்துறையினருடன் கலந்துரையாடி அதிக காலம் தாழ்த்தாது விரைவில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் சாட்சியங்கள் இன்றி நீண்டகாலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.
பகிரவும்...