இலங்கை
அவசரகால நிலையினை நீடிக்காதிருக்க தீர்மானம்

பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் இறுதியில்மேலும் படிக்க...
சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு

முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார். இதனிடையே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்குமேலும் படிக்க...
யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள்மேலும் படிக்க...
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த வாக்குமூலம் ஒன்றை அளித்தார். இதன்போது, நிலக்கரி கொள்முதல் மற்றும் அது தொடர்பானமேலும் படிக்க...
சுகீஸ்வர பண்டார ஜூலை 08 வரை விளக்கமறியலில்

இன்று காலை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஸ்வர பண்டார, வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கை மற்றும் முதற்கட்டமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்-திற்கான தேசிய சபை கூடியது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கூடியது. பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான அநுர கருணாதிலக,; தம்மிக படபெந்தி, சுசில் ரணசிங்க, ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின்மேலும் படிக்க...
சாலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தமது சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு: அமைச்சர் உறுதி

இலங்கையின் மீன்பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத இழுவைமடித் தொழிலைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டமூலங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சிறிய படகுகளுக்குமேலும் படிக்க...
54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து பெய்து வரும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்மேலும் படிக்க...
பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட இருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிமன்றம்மேலும் படிக்க...
ஒற்றை ஆட்சி முறைமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும், சமஸ்டியை மிக மோசமாக கேலி செய்தவர்களே இன்று சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள் என்றும்மேலும் படிக்க...
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவினால் நேற்றைய தினம் (29) நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் 2000ஆம் ஆண்டுமேலும் படிக்க...
இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் நிதியியல் முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினர் இன்றைய தினம் (30) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் விடுத்த அழைப்பின்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில், சிறுவர்களை இலக்கு வைத்துமேலும் படிக்க...
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தது! பிரதான போக்குவரத்து பாதையில் நெருக்கடி

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்த காரணத்தினால் எந்த இழப்புகளும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானமேலும் படிக்க...
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்18,412 தன்சால்கள் பதிவு

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI Union) தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி

பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை ஸ்தாபித்த மஹிந்த மஹ ரஹத் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி
பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி, பெருமைமிக்க ஒரு நாகரிகத்திற்கு பாதை அமைத்த உயரிய பௌத்த தர்மம் இந்நாட்டிற்கு கிடைத்ததுமேலும் படிக்க...
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்-களுக்கு வாக்குரிமை: அரசாங்கம் தீவிர பரிசீலனை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவது குறித்தும், மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்வது தொடர்பான யோசனைகளைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 469
- மேலும் படிக்க

