இலங்கை
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்: நாகமுத்து பிரதீபராஜா

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியமேலும் படிக்க...
இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஷார செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்குமேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக்மேலும் படிக்க...
கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள்மேலும் படிக்க...
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியமேலும் படிக்க...
இராஜதந்திர பணிகளை நிறைவு! இலங்கையை விட்டு வெளியேறுகிறார் அமெரிக்க தூதுர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சுங் எதிர்வரும் 16ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் சுமார் நான்கு ஆண்டுகள் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். “இலங்கையில் நான் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் நான்மேலும் படிக்க...
போலந்து விசா மோசடி: 4 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது

போலந்து நாட்டிற்குச் செல்வதற்காக போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தம்பதியினர்,மேலும் படிக்க...
சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி

2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை குறித்து நாட்டின் பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணி இன்றுமேலும் படிக்க...
‘டித்வா’ புயல் : விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவ-த்தை கோரும் எதிர்க்கட்சி
‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இன்று (06) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், விசேடமேலும் படிக்க...
கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா 2026: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக் கூட்டம் இன்று (06) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலர்மேலும் படிக்க...
இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) ஆரம்பமாகியது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமான இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளாவன, மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்றமேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ்மேலும் படிக்க...
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது நாளை (ஜனவரி 07) காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும். கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனைமேலும் படிக்க...
நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண், விமானம் மூலம் யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றம்

நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண்ணொருவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது தகவலின்படி, நெடுந்தீவைச் சேர்ந்தமேலும் படிக்க...
போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம் – பாதுகாப்பு அமைச்சர்
இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அனுராதபுரம் இலங்கை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் நேற்று பொலிஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- …
- 468
- மேலும் படிக்க

