Main Menu

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (18) ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இரண்டு கப்பல்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.