நுவரெலியாவில் பேருந்து விபத்து – 23 பேர் காயம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் குருணாகலிலிருந்து பதுளைக்கு சுற்றுலா சென்று மீண்டும் நுவரெலியா வழியாக குருநாகலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு 11:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 19 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாக நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார் .
மேலும் விபத்து நேரிட்ட போது பேருந்தில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும் இதில் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர்ந்து ஏனைய பயணிகளை நுவரெலியா பொலிஸார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்குவதற்கு இடம் வழங்கி அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றன.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...