Main Menu

இலங்கை குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வாழ்த்துகிறேன் – சவூதி அரேபிய தூதுவர்

இலங்கை குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெறவேண்டுமென வாழ்த்துகிறேன் என்று சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இலங்கை குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபிய தூதுவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும், கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், இலங்கை அரசு மற்றும் அதன் நேசமிகு குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...