Main Menu

SJB – UNP இணைந்து பொதுக்கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம்

பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன.
இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது.
இந்தநிலையில் இரண்டு கட்சிகளும் இணைந்து பொதுக்கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டது.
இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...