Main Menu

வட மாகாண ஆளுநரை சந்தித்தனர் யாழ். தமிழ் சங்கத்தினர்

வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் இன்று (13) காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர்.

இதன்போது சங்கத்துக்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர்.

அவ்வேளை, சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய “திருக்குறள் உரைநூல்” ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ்ச் சங்க பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ், தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி, முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், செயலாளர் ச. லலீசன், விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பகிரவும்...
0Shares