கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, மக்களின் உயிரைக் பாதுகாப்பது ஒன்றே தற்போது நமக்கு இருக்கின்ற முக்கிய கடமையாகும்.
ஆகவே அதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். அதுதான் கலைஞரின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்க்கும்.
மேலும் கலைஞரின் பிறந்தநாள் தினத்தன்று அவரவர் இல்லங்களில், கலைஞர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள்.
அத்துடன் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குங்கள்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.