Main Menu

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு

த.வி புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு  கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொது சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திரு உருவப் படத்திற்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

பகிரவும்...