Main Menu

36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய

மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 25 வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் கொழும்பு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 9 வெளிநாட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 19 வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பகிரவும்...