Main Menu

500 மில்லியன் டொலர் : உலக வங்கியுடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இணையத்தளத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

700 மில்லியன் டொலர்களில் 200 மில்லியன் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் இணையதளம் தெரிவித்திருந்தது.

பகிரவும்...