Main Menu

31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம் (12/01/2022)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர்.திரு. நல்லதம்பி இரத்தினசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 12/01/2023 வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்றைய தினம் அன்பு பிள்ளைகள் ஸ்ரீரங்கன் (ரி.ஆர்.ரி தமிழ் ஒலி அறிவிப்பாளர்) பிரான்ஸ், ஸ்ரீரமணன் (பிரான்ஸ்) , ஸ்ரீதாரணி (ஜேர்மனி), அன்பு மருமக்கள் சாந்தினி (பிரான்ஸ்), இதயராணி (தீபா) பிரான்ஸ், மத்தியாஸ் (ஜேர்மனி) அன்பு பேரப்பிள்ளைகள் தர்சினி, சிந்தியா, ஜெனுசாந்த், அமரர். தர்சிகா, யதுர்சிகா, ஆதவன் (பிரான்ஸ்), அபிஷேக், லக்சிகா (ஜேர்மனி) பாசமிகு பூட்டி சயானா (பிரான்ஸ்) ஆகியோர் ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றார்கள்.

31ம் நாளில் நினைவு கூரப்படும் அமரர். திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம் அவர்களை நாமும் நினைவு கூர்ந்து கொள்கிறோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் தமிழ் ஒலி குடும்பத்தினர்.

பகிரவும்...