Day: October 13, 2021
ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியம் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு,மேலும் படிக்க...
அயல்நாட்டின் உறுதிப்பாட்டை இந்தியா உயர் மட்டத்தில் எதிர் பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திரு இரா. சண்முகநாதன் (13/10/2021)
தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்ட பிரான்ஸ் La Courneuve இல் வசிக்கும் இரா சண்முகதாதன் அவர்கள் தனது பிறந்தநாளை 13 ஆம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமையான இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று பிறந்தநாளை கொண்டாடும் இரா. சண்முகநாதன்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளது!
பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக, தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2001ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகமேலும் படிக்க...
சனிக்கிழமை திறக்கப்படும் பேராசிரியர் Samuel Paty சதுக்கம்!
பேராசிரியர் சாமுவேல் பற்றி நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதுக்கம், வரும் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளது. பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் நினைவாக இந்த சதுக்கம் பரிஸ் 5 இல் அமைக்கப்பட்டுள்ளது. Hôtel de Cluny இற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
நேபாளத்தில் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 28பேர் உயிரிழப்பு- பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!
நேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு இந்த விபத்துமேலும் படிக்க...
ஈராக் நாடாளுமன்ற தேர்தல்: அல்-சதரின் சேரோன் இயக்கம் வெற்றி!
திட்டமிட்டதைவிட ஓராண்டுக்கு முன்னரே நடத்தப்பட்ட ஈராக், நாடாளுமன்ற தேர்தலில் சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதரின் சேரோன் இயக்கம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சுன்னி இஸ்லாமியமேலும் படிக்க...
ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி
ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டிலும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தீவிரவாதிகள் செயற்படமேலும் படிக்க...
உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் – ஜெய்சங்கர்
பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்தமேலும் படிக்க...
அடுத்த வருடம் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை
அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிக்குமேலும் படிக்க...
மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்
மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு இருக்கின்றபோதும் அதனைமேலும் படிக்க...
ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப் பட வேண்டும் – இரா.சம்பந்தன்
தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்றமேலும் படிக்க...