Main Menu

சனிக்கிழமை திறக்கப்படும் பேராசிரியர் Samuel Paty சதுக்கம்!

பேராசிரியர் சாமுவேல் பற்றி நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதுக்கம், வரும் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளது.

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் நினைவாக இந்த சதுக்கம் பரிஸ் 5 இல் அமைக்கப்பட்டுள்ளது. Hôtel de Cluny இற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த Paul-Painlevé சதுக்கத்தினை சில மாறுதல்களோடு பெயர் மாற்றம் செய்து, இந்த புதிய சதுக்கம் திறக்கப்படுகின்றதாக ஐந்தாம் வட்டார முதல்வர் Florence Berthout தெரிவித்தார்.

 வரும் சனிக்கிழமை ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் கொல்லப்பட்டதின் முதலாவது ஆண்டு நினைவாக அன்றைய தினம் இந்த சதுக்கம் திறக்கப்படுகின்றது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த சதுக்கத்தை திறந்து வைக்கின்றார்.  

பகிரவும்...