Day: July 14, 2020
கனடாவில் முதல் முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை!
கனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இது மருத்துவ மற்றும் உளவியல்மேலும் படிக்க...
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஆண்ட்ரெஜ் டுடா மீண்டும் வெற்றி!
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) பெரும்பான்மை வாக்குகளுடன் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளின் முடிவுகள், ஆண்ட்ரெஜ் டுடாவின் வெற்றியை உறுதிசெய்துள்ளது. இதேவேளை, மீதமுள்ள கணக்கிடப்படாத வாக்குகள் இறுதி முடிவைத் தடுக்கமேலும் படிக்க...
இரண்டாவது கொரோனா வைரஸ் அலையை ஜேர்மனி தடுக்க முடியும்: சுகாதார அமைச்சர்
மக்கள் விழிப்புடன் இருப்பதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருந்தால், இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை ஜேர்மனி தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்று நிலைமை குறித்து ஊடகங்களிடம் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் புதல்வி ஸின்ட்ஸி மண்டேலா இன்று திங்கட்கிழமை காலமானார். நெல்சன் மண்டேலா மற்றும் வின்னி மடிகிஸெலா ஆகியோரின் புதல்வியாகிய இவர் டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்காவின் தூதராக பணியாற்றி வந்தார்.மேலும் படிக்க...
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி
அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின்மேலும் படிக்க...
இந்தியா – ஆப்கானிஸ்தான் வர்த்தகத்திற்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்!
இந்தியா – ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் பாகிஸ்தானின் வாகா எல்லையை திறக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு நாளை (புதன்கிழமை) முதல் வாகா எல்லைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : 9 இலட்சத்தை தாண்டியது பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 7 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.மேலும் படிக்க...
நாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேட அரசாங்கம் முயற்சி- அநுர
நாட்டின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி அரசியலில் ஆதாயம் தேடவே, கொரோனாவின் உண்மை நிலையை அரசாங்கம் மறைக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...
கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்மேலும் படிக்க...
புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் இல்லை – சுமந்திரனின் கருத்துக்கு சம்பந்தன் பதில்
புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லைமேலும் படிக்க...