Day: April 29, 2019
ரிஷாட்,ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
ஸ்பெயின் தேர்தலில் சோசலிச கட்சி வெற்றி
ஸ்பெயின் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் சோசலிச கட்சி வெற்றியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. எனினும், இத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அக்கட்சி தவறியுள்ளது. பிரதமர் பெட்ரோ சன்செஸின் சோசலிச கட்சி 29 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்து ஆட்சியமைக்க வலதுசாரி கட்சி, பிராந்தியமேலும் படிக்க...
அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதும் பயங்கராத தாக்குதலை தடுக்க தவறியமை மூலம் அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக கூறி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று வருடகால தடைக்கு உட்பட்டுள்ள சட்டத்தரணியான நாகானந்த கொடித்துவக்குவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 31 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாது பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைமேலும் படிக்க...
தீவிர அரசியலில் கால்பதிக்க வியூகம் – தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் ரஜினி?
எதிர்வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார். அடுத்த மாதம் அதிரடியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் குதிக்காமலேயே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.மேலும் படிக்க...
4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.வுக்கு விஜயகாந்த் ஆதரவு
4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க.மேலும் படிக்க...
மெக்சிகோ – சொகுசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் சொகுசு பஸ் சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் டோர்ரியோன் நகரை நோக்கி ஒரு சொகுசு பேருந்துமேலும் படிக்க...
காபி சுவையுடன் ஊக்க பானமாக புதிய கொக்கொ கோலா – இந்த ஆண்டில் அறிமுகம்
புதிய காபி சுவையுடன் கூடிய ஊக்கபானத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொக்கொ கோலா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். மேலும் படிக்க...
பிரதம நீதியரசர், பதில் சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் , பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம்
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதிமேலும் படிக்க...
ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ரயில்களில் பொதிகளை எடுத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி அனுர பிரேம ரத்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ரயில் நிலையங்களில் உட்பிரவேசிக்கும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதே போன்று ரயில் புறப்படுவதற்கு முன்னர் ரயில்களும் பரிசோதிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
பஸ் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை
உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக இலங்கைப்மேலும் படிக்க...
தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த மாதத்தில் 26 தசம் நான்கு மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பூச்சியம் தசம் மூன்று மில்லிய கிலோகிராம் அதிகரிப்பாகும். இந்த வருடம் மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைமேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற தேர்தல் – கட்சி தலைவர்கள் வாக்களிப்பு
இந்திய நாடாளுமன்றின் 4ஆம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் தெற்கு மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வாக்களித்துள்ளார்.மேலும் படிக்க...
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல்!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நாட்டு ஊடகத்திற்கு உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த தீப்பரவலின் போதுமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு!
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கணினி கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாகவே விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடவுச்சீட்டு சோதனை இயந்திர கட்டமைப்பே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அவுஸ்ரேலியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...