Day: April 24, 2019
பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தகவல்
வலைதளங்கள் மூலம் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுவதை தடைசெய்ய, பிரான்சுடன் இணைந்து செயல்படவுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். அண்மையில் நியுசிலாந்து கிறைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,மேலும் படிக்க...
ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்
ரஷிய நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தில் வெற்றிகரமாக மின்உற்பத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரஷியாவை சேர்ந்த தனியார் அணுசக்தி நிறுவனம், பெரும் பொருட்செலவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை உருவாக்கி உள்ளது. பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல்மேலும் படிக்க...
இந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.மேலும் படிக்க...
பரீட்சைகள் ஒத்திவைப்பு
நீர்பாசன திணைக்களத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவிருந்த பொறியியலாளர் உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறவிருந்த குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் திறனாற்றல் பரீட்சையையும் ஒத்திவைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.மேலும் படிக்க...
ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அதிபர் விளாடிமிர் புதினுடனான பேச்சுவார்த்தைகாக ரஷ்யா சென்றுள்ளார். கிம் தனது தனியார் ரயிலில் பயணம் செய்வதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷிய அதிபருடனான கிம்மின் முதல் சந்திப்பு இதுவாகும். பசிபிக் கடற்கரை நகரானமேலும் படிக்க...
கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 ஸ்கேன் மையங்களுக்கு சீல்
சட்டவிரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஸ்கேன் மையங்களில் மத்திய மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவக்குழுவினர், அங்கு சட்டவிரோதமாகமேலும் படிக்க...
உயிர் தீயாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 300 பேரளவில் மருத்துமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த மேலும் ஒரு தரப்பினரின்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டோர் – செல்வந்த குடும்பங்களை சேர்ந்த பட்டப்படிப்பாளர்கள்
உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 தற்கொலை குண்டுதாரிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த தற்கொலை குண்டுதாரிகளின் ஒரு பெண் தற்கொலை குண்டுதாரியும் இடம்பெற்றுள்ளார். இவர் தெமட்டகொடையில் உயிரிழந்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகள்மேலும் படிக்க...
சீனாவில் ரசாயன ஆலையில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங்சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின்மேலும் படிக்க...
என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது – டிரம்ப்
தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்ப்பை வெற்றி பெறவைப்பதற்காக ரஷியா உதவியதாகமேலும் படிக்க...
நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் பலி
நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்றமேலும் படிக்க...
நான் சன்னியாசியாகவே விரும்பினேன்- பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில், நான் சன்னியாசியாகவே ஆசைப்பட்டேன், பிரதமாக நினைக்கவில்லை என கூறியுள்ளார். டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்குமேலும் படிக்க...
மதுரை சிறையில் போராட்டம்- 25 கைதிகள் மீது வழக்கு
மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறிமேலும் படிக்க...
ஓட்டுப்பதிவு கருவியில் பாம்பு: மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் – நடிகை குஷ்பு கிண்டல்
ஓட்டுப்பதிவு கருவியில் இருந்து பாம்பு வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். வாக்குப்பதிவின்போது ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று கேரளாவின் பல பகுதிகளில்மேலும் படிக்க...
இலங்கை பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு அமெரிக்காவின் FBI உதவி
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க தூதரம் அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின்மேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விடுதலை
பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர்கள் UL 226 என்ற விமானம் மூலம் நேற்று அதிகாலைமேலும் படிக்க...
வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படம் வௌியானது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. IS அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன்மேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு?
தற்போது ஏற்பட்டுள்ள நிலமையின் காரணமாக தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். சில துறைகளில் சிறந்தவர்கள் இருக்கும் போது அந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு ஒப்படைக்காமையின் காரணமாக அந்த துறைகளில் வீழ்ச்சி ஏற்படுவதாகமேலும் படிக்க...