Main Menu

பாரிஸ் Notre-Dame தேவாலயத்தில் பெரும் தீ விபத்து- 400 வரையான தீயணைப்புப்படை வீரர்கள் பணியில்..

இன்று மாலை 18.50 மணியளவில் பாரிஸ் Notre-Dame  தேவாலயத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் மிகவும் போராடி வருகின்றனர்.

இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது Notre-Dame தேவாலயத்தின் கூரை தீடீரென தீப்பிடித்துஎரிய ஆரம்பித்துள்ளது. அதன் பின்னர் கூரை இடிந்து விழுந்துள்ளது.

தேவாலயத்தின் 93 மீற்றர் உயரமுள்ள கூரை ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக சற்று முன்னர் பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் பாரிஸ் மாநகர முதல்வர் தனது Twitter பக்கத்தில் தெரிவிக்கையில் இது பற்றி தன்னால் விபரிக்க வார்த்தைகள் இல்லை எனவும் பாரிஸ் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதித் தகவல்களின் படி சுமார் 400 வரையான தீயணைப்புப்படை வீரர்கள்
குவிக்கப்பட்டுள்ளனர்

பகிரவும்...