Main Menu

விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களை சந்தித்தார் ஸ்ரீதரன்!

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞர்கள், தாங்கள் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...