லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பில் சிறைவாசம் அனுபவித்தவர் உயிரிழப்பு
முன்னாள் வௌிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் சிறைவைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றினால் 62 வயதுடைய குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் அவர் சிறை வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ல்க்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார்.