Main Menu

மக்களை மேலும் சுமைக்குள் தள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்கம் இந்த மக்களை மேலும் சுமைக்குள் தள்ளவே விரும்புகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதகமான பொருளாதார நிலைமைக்கு இந்த அரசாங்கமே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடன்களைப் பெற்று, அதில் சிலவற்றினை தமது பைகளுக்குள் போட்டுகொண்டு நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்துவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக தமது அபிவிருத்தி பணிகளையே வியாபாரப்படுத்தி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

பகிரவும்...