Main Menu

பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 65ஆயிரத்து 37பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 26இலட்சத்து 55ஆயிரத்து 728பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 489பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 116பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 23இலட்சத்து 95ஆயிரத்து 517பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 641பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 95ஆயிரத்து 174பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

பகிரவும்...