பண்டிகை காலத்தில் சைபர் மோசடிகள் அதிகரிப்பு
பண்டிகை காலத்தில் தொலைபேசி மூலம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப் பரப்பப்படும் அபாயம் காணப்படுவதாக நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
நம்பகமற்ற இணைப்புகளை அழுத்துவதையோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையோ தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
