Main Menu

பசிலின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானதல்ல – ரணில்

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட வல்லுனர்கள் இதை தெரிவித்துள்ள நிலையில் அவரது உறுப்புரிமையினை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல முடியாது என்றும் கூறினார்.

நாட்டில் தேசிய பொருளாதாரம், ஜனநாயகக் கொள்கை ஆகியவை பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில் நாட்டின் எதிர்காலம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு குடும்ப ஆட்சி தொடர்ந்தால் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். (நன்றி கேசரி)

பகிரவும்...