Main Menu

நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் – பிறந்தநாள் வாழ்த்தில் மஹிந்த

நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது வாழ்வின் மற்றொரு வருடத்தில் அடியெடுத்து வைக்கும்போது அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள். அவரது இருப்பு எப்போதும் பலத்தின் ஆதாரமாக இருந்து வருகிறது.

மேலும் நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை அவர் மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது”  என பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...