Main Menu

நாட்டில் கொரோனா பாதிப்பு 11,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 41 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்பதுடன் ஏனைய 356 பேரும் பேலியகொட மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து 582ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 60ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை நான்காயிரத்து 905 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இன்று ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 21ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...