Main Menu

நாட்டின் 16 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் – இராணுவத் தளபதி

நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா – மினுவங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதியான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இருக்க முடியாது என்றும் அவர்கள் வைத்தியசாலையில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிரவும்...