Main Menu

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 11 ஆம் திகதி 10 ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழாவும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுயுள்ளது.

மேலும், 23ஆம் திகதி காலை மாம்பழத்திருவிழாவும் 24ஆம் திகதி சப்பரமும் மறுநாள் 25ஆம் திகதி தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...